செவிலியருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் கைது

0 1284

விருதுநகர் மாவட்டத்தில், செவிலியருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

சாத்தூரில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரகுவீர் என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இவர், மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்தச் செவிலியர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மருத்துவர் ரகுவீரை கைது செய்த போலீஸார், மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணவேணி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments