முதலீட்டிற்கு அதிக வட்டித் தருவதாகக் கூறி ரூ.40 கோடி மோசடி தி.மு.க.வைச் சேர்ந்தவர் மீது முதலீட்டாளர்கள் போலீசில் புகார்

0 3645

திருச்சியில், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 200 பேரிடமிருந்து 40 கோடி ரூபாய் வரையில் பெற்றவர் தற்போது அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டதால், பணத்தை திருப்பி தர முடியாதெனக் கூறி மிரட்டுவதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் சுமார் 20 பேர் புகார் அளித்தனர். அதில், தில்லை நகரைச் சேர்ந்த முகமது பாரூக் என்பவர் தனது ஈஷா குரூப்பில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியதாகவும், அதனை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பணத்தைக் கேட்டால் தர முடியாது என்றும், தான் தி.மு.க.வில் இணைந்துவிட்டதால், உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என முகமது பாரூக் மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments