ஜி 20 மாநாட்டுக்காக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு... மூவர்ணக் கொடிகள், மின்னொளியால் ஜொலிக்கும் தலைநகர வீதிகள்

0 1214

ஜி 20 மாநாட்டுக்காக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வரவிருப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதுடன், போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர். சதித்திட்டங்களை முறியடிக்கும் ஒத்திகைகளும் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டன.

ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி டெல்லியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கன்னாட் பிளேஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன.

ஜி20 மாநாட்டையொட்டி தலைநகரில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மூவர்ணக் கொடிகள் காண்போரின் கவனத்தை கவருகின்றன. ஜிஜிஆர் பாயின்ட்டில் உள்ள மூவர்ண நீரூற்று பார்வையாளர்களின் கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி வளாகத்தின் சுவர்கள் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments