இ.யூ.மு.லீக் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பை எதிர்த்து பொதுக்குழுவில் கூச்சல்-குழப்பம்

0 1040

தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கூச்சல் -குழப்பம் ஏற்பட்டது. கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவிக்கும் வகையில் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

நிர்வாகிகளை ஆலோசிக்காமல் புதியதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ஒருதரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அறிவிப்பு வெளியிடப்பட்டுக் கொண்டிருந்த மேடையை நோக்கி முன்னேறிச் செல்ல முயன்றவர்களை மாவட்ட பொதுச் செயலாளர் முகமது அபுபக்கரின் ஆதரவாளர்கள் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

போலீஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தவே, ஒருதரப்பினர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments