வாக்னரை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் முடிவு

0 1434

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வாக்னர் கூலிப்படை மீது கொடூர கொலைகள், கைதிகளை சித்திரவதை செய்தல், சூறையாடுதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

உலக அமைதிக்கு வாக்னர் கூலிப்படையால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன், அதனை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம், புடினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஷின் அண்மையில் மர்மமான முறையில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments