சாலையில் வழிவிடும் தகராறில் வழக்கறிஞர் மற்றும் அவரது மைத்துனர் மீது சரமாரியாக தாக்குதல்

0 1416

சென்னை பனையூரில் வாகனத்திற்கு வழிவிடும் தகராறில் பெட்ரோல் பல்க்கில் தஞ்சமடைந்த வழக்கறிஞரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் விக்னேஷ், தனது மனைவி மற்றும் மைதுனருடன் ஈஞ்சம்பாக்கத்தில் திரைப்படம் பார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பனையூர் அருகே சாலையை கடக்கும்போது இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் சிலர் வளைத்து வளைத்து ஓட்டியதாகவும், எனவே, விக்னேஷ் ஹாரன் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட தகராறில் அந்த இளைஞர்கள்.


மிரட்டல் விடுக்கவோ, காரை அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் வழக்கறிஞர் நிறுத்தினார். எனினும், அந்த இளைஞர்கள் வழக்கறிஞர் மற்றும் அவரது மைத்துனர் லலித்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், விக்னேஷ் ஏற்கனவே தனது நண்பர்களுக்கு செல்போன் மூலமாக அளித்த தகவலின் பேரில் அங்கு காரில் வந்த மற்றொரு கும்பல், தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து நையப்புடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments