வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு வந்த ரௌடி படுகொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை

0 3130

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய ரவுடி செந்தில் என்ற ஓனான் செந்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, நாகலூர் என்ற இடத்தில் செந்தில் சென்ற காரை மற்றொரு காரில் வந்து வழிமறித்த கும்பல் செந்திலை வெட்டிக் கொலை செய்ததோடு, அவருடன் இருந்த வழக்கறிஞர் அகிலனையும் வெட்டியதாக கூறப்படுகிறது.

கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் அமைத்துள்ளார். விசாரணையில், வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த சின்னப்பா என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் செந்திலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு பழிக்குப் பலியாக சின்னப்பாவின் மகன் கூலிப்படைய வைத்து கொலை செய்திருக்கலாம் என கருதிய போலீஸார் கூலிப்படையைச் சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments