சனாதன ஒழிப்பு என தி.மு.க. பேசுவது தமிழகம் குட்டிச் சுவராகி இருப்பதை திசைதிருப்ப நாடகம்: இ.பி.எஸ்.

0 1536

தமிழகம் குட்டிச் சுவராகி இருப்பதை மறைக்கவே உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பை பேசு பொருளாக்கி இருப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்றவற்றை திசைதிருப்ப சனாதன ஒழிப்பு நாடகத்தை தி.மு.க. அரங்கேற்றுவதாக தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே தேர்தலை தி.மு.க. எதிர்ப்பது பற்றிய பற்றிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நாட்டிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளும் ஸ்டாலின், தேர்தலை சந்திக்க பயப்படுவது ஏன் என்று வினவியுள்ளார்

கலால், பத்திரப்பதிவு, ஜி.எஸ்.டி., சாலை வரி போன்றவற்றில் அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ள நிலையில், 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பது மட்டும் தான் தி.மு.க. அரசின் சாதனை என்று அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments