வேலூரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன... வேலை செய்யாத அதிகாரிகளின் பட்டையை உரிக்கணும்: துரைமுருகன்

0 924

வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வது இல்லையெனவும் அவர்களின் பட்டையை உரிக்க உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

காட்பாடியில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 660 பேருக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வேலூர் மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி புனரமைப்பு பணிகளையும் அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments