மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் - அமைச்சர் மூர்த்தி

0 746

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பயனாளிகளுக்கும் விவசாய வேளாண் உபகரணங்களை வழங்கினார். இதனைப் பெற பயனாளிகள் வரிசையாக வந்தனர்.

அவர்களில் டில்லர் இயந்திரத்தை பெற்ற நபரைப் பார்த்த அமைச்சர் மூர்த்தி, நீயுமா இதில் வாங்குகிறாய் என்று கேட்டார். அதற்கு அந்நபர் ஆமாம் என்றதும் ஆண்டவனுக்கே வெளிச்சம் என்பது போல அண்ணாந்து பார்த்து போ போ என கூறினார் அமைச்சர் மூர்த்தி.

இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை சார்பில் மாடித்தோட்டத்திற்கான கிட் வழங்கப்பட்டது.

அப்போது இதையெல்லாம் பெயருக்கு தான் கொடுக்கிறீர்கள் என்றும், நானும் நிறைய மாடியில் பார்த்து விட்டேன், எந்த மாடியிலேயும் தோட்டமே இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதற்கு, நிறைய பேர் வாங்கி மாடியில் தோட்டம் வளர்ப்பதாக அதிகாரிகள் பதில் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments