வடகிழக்கு பருவமழை தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை

0 858

வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் , வெள்ளத்தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய அவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்தார்.

அப்போது, பருவமழை தொடங்கும் நிலையில் உள்ளதால், வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செல்ல வேண்டிய பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

ஒப்பந்ததாரர்களின் பணிகள் அனைத்தும் வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments