நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

0 1386
நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி ஆகியவற்றுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில் உத்தரப்பிரதேசத்தின் கோசியில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.-வாக இருந்த தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. திரிபுராவின் தன்பூரில் பா.ஜ.க.வின் பிரதிமா பௌமிக், தனது மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மற்ற 5 தொகுதிகளில் உறுப்பினர்களின் மறைவால் அந்த இடங்கள் காலியாகின. இந்த நிலையில் 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் வரும் 8-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments