டெல்லியில் ஆன்லைன் மூலம் உணவுப் பொருள் விநியோகத்திற்குத் தடை.. ஜி20 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை எனத் தகவல்.. !!

0 961

டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய காவல்துறையின் சிறப்பு ஆணையர் எஸ்.எஸ்.யாதவ், டெல்லி முழுவதும் தபால் மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள், நோயியல் ஆய்வகங்களின் மாதிரி சேகரிப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

மாநாடு நடக்கும் நாட்களில் மருந்துகள் தவிர ஆன்லைன் டெலிவரி சேவைகள் நிறுத்தப்படும் என்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் எஸ்.எஸ்.யாதவ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments