தெலங்கானாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

0 1250
தெலங்கானாவில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே பர்லியாறு பகுதியில் சுற்றுலா பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் இருந்து 35க்கும் மேற்பட்டோர் பேருந்து மூலம் உதகைக்கு சுற்றுலா வந்திருந்தனர்.

அங்கிருந்து கொடைக்கானல் செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது மேட்டுப்பாளையம் பர்லியார் சோதனைச்சாவடி அருகே பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆணும், பெண்ணும் உயிரிழந்தனர். பேருந்தில் வந்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments