இண்டியா கூட்டணியின் 4வது கூட்டத்தை போபாலில் நடத்த முடிவு..!

0 1110
இண்டியா கூட்டணியின் 4வது கூட்டத்தை போபாலில் நடத்த முடிவு..!

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் நான்காவது கூட்டம் மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.இதற்கான தேதிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

பாட்னா, பெங்களூர், மும்பையைத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்துடன் அனைத்துத் தலைவர்களும் பங்கேற்கும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தையும் போபாலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அவற்றில் இருந்து பொது செயல்திட்டத்தை உருவாக்க டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் வரும் 13ம் தேதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இண்டியா நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் மற்றும் ஒரே இந்தியா ஒரே தேர்தல் குறித்து இன்றையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments