சென்னை வசந்தி என்ற பெண் கிரைண்டரில் மாவு அரைக்கும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்... ஈர கையுடன் ஸ்விட்ச்சில் கை வைத்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது

0 1340

சென்னை ராணி அண்ணா நகரை சேர்ந்த வசந்தி என்ற பெண், கிரைண்டரில் மாவு அரைக்கும்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். ஈர கையுடன் ஸ்விட்ச்சில் கை வைத்த அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் வசந்தி கூச்சலிட்டடுள்ளார்.

அருகிலிருந்த அவரது மகன் விக்னேஷ், காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாயந்துள்ளது. இரண்டு பேரின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது மகள் யுவஸ்ரீ கட்டையால் தாக்கியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

விக்னேஷ் உயிர் பிழைத்த நிலையில், மயக்கமடைந்த தாய் வசந்தியை மருத்துவமனைக்குக்க கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதேபோல், கடந்த ஆண்டு கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்ததால், அதை சரிசெய்து வைத்தாகவும், நேற்று மாவு அரைக்கும்போது தாய் வசந்தி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துவிட்டதாகவும் அவரது மகன் விக்னேஷ் வேதனையுடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments