சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போலீசார் கைது செய்தனர்.

0 2014

திட்டக்குடி அருகே யார் முதலில் செல்வது என்ற போட்டியில் பேருந்துகளை சாலையில் நிறுத்திவிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்ட இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர் பேருந்து நிறுத்தத்தில் கார்த்திகேயன் என்ற தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, கேஆர்டி என்ற தனியார் பேருந்து நடத்துநர் விரைந்து செல்லுமாறு கூறியதாகத் தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆவினன்குடி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காத நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அவரது உத்தரவின்படி பேருந்துகளை பறிமுதல் செய்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments