புதுச்சேரியில் சார் பதிவாளர் அலுவலகங்களில் போலி பத்திரங்கள் கண்டெடுப்பு..!

0 6204

புதுச்சேரியில் உழவர்கரை மற்றும் பாகூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு போலி உயில் பத்திரங்கள் இருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

போலி பத்திரம் மூலம் நில அபகரிப்புகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்திய ஆய்வில் உழவர்கரையில் 23 போலி பத்திரங்களும், பாகூரில் 3 போலி பத்திரங்களும் கண்டறியப்பட்டு, இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் பத்திர பதிவேட்டுத்துறை இயக்குநர் ரமேஷ், மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments