மக்களவைக்கு முன்கூட்டியோ தாமதமாகவோ தேர்தல் வராது - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

0 948

மக்களவைக்கு முன்கூட்டியோ தாமதமாகவோ தேர்தல் வராது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கான தேர்தலை முன்கூட்டியே நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலை மறுத்த அவர் அத்தகைய திட்டம் ஏதுமில்லை என்று கூறினார்.

தமது பதவிக்காலம் முழுவதும் பிரதமர் மோடி மக்களுக்கு சேவை புரிய விரும்புவதாகவும் அனுராக் தாக்கூர் கூறினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கமிட்டி பல சுற்று விவாதங்களும் ஆலோசனைகளும் நடத்தி இறுதிமுடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 18ஆம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியதில் முக்கிய நோக்கம் ஒன்று இருப்பதாகக் கூறிய அவர் உரிய நேரத்தில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments