தொண்டாமுத்தூர் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி..!

0 2326

பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூர் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் இரவு உணவு சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 5 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொண்டாமுத்தூர் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 35 மாணவர்கள் தங்கி உள்ளனர்.

மாணவர்களுக்கு நேற்று இரவு உணவாக சாதம், பாசிப்பயறு குழம்பு, முட்டை வழங்கப்பட்டுள்ளது. முதலில் உணவு சாப்பிட்ட  5 மாணவர்களுக்கு கடும் வயிற்று வலியுடன், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 மாணவர்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதியம் செய்த பாசிப்பயிறு குழம்பை இரவும் உண்டதால் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுதி காப்பாளர் மற்றும் சமையலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments