மீன்பிடிக்கச் சென்றபோது என்ஜின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்... பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல் படை

0 1548

ராமேஸ்வரம் அருகே எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் படகுடன் தத்தளித்த மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகில் திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதுகுறித்து இந்திய கடலோர காவல்படையினக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு சி 432 என்ற ரோந்து படகில் விரைந்து வந்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பழுதடைந்து நின்ற படகின் எஞ்சின் கோளாறை சரி செய்து மீனவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments