சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 வெற்றிகளைத் தொடர்ந்து அடுத்த மாதம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ மும்முரம்

0 2077

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 வெற்றிகளைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் ககன்யானை செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தரா சிங் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். டெல்லியில் பேசிய அவர், ககன்யான் விரைவில் செலுத்தப்படும் என்றும், இதனை அடுத்த மாதமே செலுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு 3 பேரை அனுப்பி, மூன்று நாட்களுக்குப் பின் பத்திரமாக பூமிக்குத் திரும்ப அழைத்து வருவதே ககன்யானின் பிரதான இலக்காகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments