ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் - அண்ணாமலை பேச்சு

0 2258

ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டையில் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம் என்றார். அடிக்கடி, தேர்தல் நடைபெறுவதால் அரசு அதிகாரிகளின் வேலை பாதிக்கிறது என்றும் அவர்கள் மக்கள் பணிகளை செய்ய முடியாமல் தேர்தல் வேலைகளை மட்டுமே பார்த்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அரசு அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியும் என்று கூறிய அண்ணாமலை அவர்களுடைய பணியை முறையாக செய்ய முடியும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments