அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒசூரைச் சேர்ந்த பெண்ணுக்கு நுண்துளை தண்டுவட சிகிச்சை

0 17297

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒசூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கு இடுப்பு வலிக்காக, நுண்துளை தண்டுவட சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டின் சர்வதேச நிறுவனத்தின் உதவியுடன் இந்த சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பற்றி விளக்கம் அளித்த மருத்துவர்கள் , மூட்டு, இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டோர்,  நுண்துளை தண்டுவட சிகிச்சையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவின் கீழ் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, விளையாட்டு போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான அறுவை சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments