பிரதமர் மோடி தமிழகத்திலிருந்து போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் முடிவு செய்யும் - வானதி சீனிவாசன் பதில்

0 1164

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் கூறினார்.

திருச்சியில் நடைபெற்ற பாஜக மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைத்தது தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதி அல்ல என்று கூறிய அவர், புதிதாக 10 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தேர்தல் வாக்குறுதியில் 100 ரூபாய் கேஸ் விலை குறைப்போம் என கூறிவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கு சிலிண்டர் விலை குறைப்பு பற்றி விமர்சிக்க அருகதை இல்லை எனவும் வானதி சீனிவாசன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments