பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ மேஜர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

0 1161

பாகிஸ்தானில் வடக்கு வாரிஸ்தான் மாவட்டத்தில் மிரான் ஷா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மிரான் ஷா பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து ராணுவ மேஜர் அமிர் அஸிஸ் தலைமையில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் தரப்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், கைபர் மாவட்டம் திரா பள்ளத்தாக்கில், பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments