வாடகை வீட்டை ஆக்கிரமித்துள்ள திமுக பிரமுகரை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

0 2435

பல ஆண்டுகளாக வாடகை தராமல் வயதான தம்பதியினரின் வீட்டை ஆக்கிரமித்துள்ள திமுக வட்டச் செயலாளரை வெளியேற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தியாகராய நகரில் உள்ள அப்துல் அஜீஸ் தெருவில் 64 வயதான கிரிஜா என்பவரின் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், பல ஆண்டுகளாக வாடகை தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் வாடகை பாக்கியைக் கொடுக்காமலும், வீட்டைக் காலி செய்யாமலும் இருந்துள்ளார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், உத்தரவு கிடைத்த 48 மணி நேரத்தில் ராமலிங்கத்தை வீட்டை விட்டு வெளியேற்றி அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments