மதுரையில் போலி சாவியை தயாரித்து லாட்ஜில் அறையின் பூட்டை திறந்து 102 சவரன் நகை கொள்ளை

0 1576

மதுரையில், கடந்த 18-ஆம் தேதி ஆந்திர மாநில நகை வியாபாரியிடமிருந்து 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள 102 சவரன் நகையை கொள்ளையடித்த நபரை ஹைதராபாத்தில் போலீசார் கைது செய்தனர்.

காக்கிநாடாவை சேர்ந்த ஜித்தேந்தர் ஜெயின் மும்பையிலிருந்து தங்க நகைகளை வாங்கி வந்து விற்பனை செய்வதற்காக மேலமாசி வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தபோது, அவர் வெளியே சென்ற நேரத்தில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு நகை திருடப்பட்டது.

இதுகுறித்த புகாரில் திடீர் நகர் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் அதே லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த ஹைதராபாத்தை சேர்ந்த பினிடி ரமேஷ்பாபு கொள்ளையடித்தது தெரியவந்தது.

லாட்ஜில் அவர் அளித்திருந்த தகவல்களை வைத்து கைது செய்யப்பட்ட அவர், போலி சாவி தயாரித்து, கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததும், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments