திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்த பின் முகமலர்ச்சியுடன் வெளியே சென்ற நடிகை விஜயலட்சுமி..!

0 1691

நாம் தமிழர் கட்சி சீமான் மீது கொடுத்த புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம்  இரண்டாவது நாளாக துணை ஆணையர் உமையாள் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் விசாரணை முடிந்த நிலையில் வெளியே வந்த நடிகை விஜயலட்சுமி சிரித்த முகத்துடன் கைகளை தூக்கியவாறு அங்கிருந்து சென்றார். திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகி நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் கொடுத்ததை தொடர்ந்து மதுரவாயல் காவல் நிலையத்தில் கோயம்பேடு துணை ஆணையர் உமையாள்  4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையில்  கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் மீது பதியப்பட்டுள்ள வழக்கு பிரிவின் கீழ் பெண் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம்,  கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments