நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பவர்களாக மீனவர்கள் உள்ளனர் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

0 924

நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பவர்களாக மீனவர்கள் உள்ளனர் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் உவரியில் மீனவர்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கேட்டறிந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தூண்டில் வளைவு, ஆழ்கடல் மீன் பிடிக்கும் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை கொள்கை முடிவின் அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு 8 சதவீதமாக உள்ளது என்றும், நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பவர்களாக மீனர்வர்கள் உள்ளனர் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மீனவர்களின் பாரம்பரிய களியல் நடனத்தை அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments