ஸ்ரீ துலுக்கசூடாமணி அம்மன் கோயிலில் வரும் 3-ம் தேதி கும்பாபிஷேகம்... முளைப்பாரிகளை ஊர்வலமாகக் கொண்டுசென்ற பக்தர்கள்

0 786

ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கசூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வரும் 3-ம் தேதி காலை 8 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 18-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று, முதல் யாககால பூஜை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று கலசங்கள், புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் மற்றும் முளைப்பாரிகள் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

புதுப்பட்டி விநாயகர் கோயிலிலிருந்து தொடங்கிய ஊர்வலம், கிழக்கு தெரு, வடுகம் சாலை, புதுத்தெரு வழியாக துலுக்கசூடாமணி அம்மன் கோயிலை சென்றடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments