சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த விவகாரம்... காவல் அதிகாரி நேரில் விசாரணை

0 2726

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறிய நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் நேரடி விசாரணை நடத்தினர்.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது அவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ராமாபுரம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக அவரைப் போன்றே உருவ ஒற்றுமை கொண்ட ஒரு பெண்ணை முகத்தை முழுவதுமாக மறைத்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் ஒரிஜினல் விஜயலட்சுமி சாதாரண முகக்கவசம் அணிந்து மட்டுமே விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அவரிடம் கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments