குன்னூர் அரசுப் பள்ளியில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு... பள்ளி வளாகத்திற்குள் சமூக விரோத செயல்: எம்.எல்.ஏ குழுவிடம் புகார்

0 1125

தேனி மாவட்டம் குன்னூரில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் இரவு நேரத்தில் புகுந்து மதுபானம் அருந்தும் சிலர் பாட்டில்களை உடைத்து போட்டு விட்டுச் செல்வதாக சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் மாணவர்கள் தெரிவித்தனர்.

அப்பள்ளியில் எம்.எல்.ஏ செழியன் தலைமையிலான சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பள்ளி நுழைவுவாயிலேயே சாக்கடை தேங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய எம்.எல்.ஏ. பாபு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரை கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, வகுப்பறைக்குள் சென்ற போது, இரவு நேரத்தில் பள்ளியில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

குழுவினர் ஆய்வு செய்துக் கொண்டிருந்த போதே குப்பை சேகரிக்கும் ஒருவர் பள்ளி வளாகத்தில் கிடந்த மாதுபான பாட்டில்களை சாக்குப்பையில் எடுத்துச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments