ஒரு லைக்கிற்கு ரூ.50 வழங்கி வங்கி ஊழியரிடம் ரூ.88 லட்சம் மோசடி

0 2854

டெலிகிராம் ஆப்பில் முதலில் 50 ரூபாய் பரிசு கொடுப்பது போல வலை விரித்து படிப்படியாக 88 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் புகார் தெரிவித்துள்ளார்.

திருமுல்லைவாயிலைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர், டெலிகிராம் ஆப்பில் வந்த ஒரு லிங்கை லைக் செய்து அதன் மூலமாக 50 ரூபாய் பெற்றதாக கூறியுள்ளார்.

பின்னர், தங்கும் ஹோட்டலை ரிவியூ செய்ய வைத்து அதற்கும் பணம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்ததாக, ஆன்லைன் கேம் ஒன்று உள்ளதாகவும் அதில் வெற்றி பெற்றால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும் தமக்கு மெசேஜ் வந்ததாக அவர் கூறியுள்ளார்.

முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து விளையாடி வெற்றி பெற்ற நிலையில், வெற்றி பெற்ற பணத்தை எடுக்க வேண்டுமெனில் சில டாஸ்க்குகளை முடிக்க வேண்டுமென கூறி படிப்படியாக 20 நாட்களில் 88 லட்சம் ரூபாய் வரையில் மோசடி கும்பல் கறந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments