இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார்

0 1948

இந்தியாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஜி20 கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இதில் முக்கிய உறுப்பு நாடான சீனாவின்அதிபர் ஷி ஜின்பிங் கலந்துகொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக சீனப் பிரதமர் லி கியாங் கலந்துகொள்வார் எனவும், இந்தியாவுக்கான சீன தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments