தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்தனர், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

0 1333

தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்தனர், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜொகன்னஸ்பர்க் நகரின்மையப் பகுதியில் உள்ள ஐந்து மாடி அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இத் தீவிபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவசரகாலப் பணிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி தெரிவித்தார்.

தீவிபத்து ஏற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு வண்டிகளும் நிற்கும் காட்சிகளும், குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments