பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை

0 1159

நெல்லை பாளையங்கோட்டை அருகே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மூளிகுளம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்ததுடன், பாஜக மாவட்ட இளைஞரணி பொதுசெயலாளராகவும் இருந்து வந்தார்.

வழக்கமான பணிகளை முடித்து வீடு திரும்பிய அவர் பாளையங்கால்வை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்றபோது, சூழ்ந்த மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது.

 கொலை நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஜெகன் மீது கொலைவழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதுகாப்புக்காக பாளையங்கோட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments