மதுரையில் பயணிகளிடம் செல்போன் பறித்துவிட்டு தப்பியோடிய வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள்

0 1527

மதுரையில் பயணிகளிடம் செல்போன்களை பறித்துவிட்டு தப்பியோடிய, ஒடிசா மாநில இளைஞரை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள், பயணிகள், அடித்து, உதைத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம், செல்போன்களை வழிப்பறி செய்த இளைஞர்கள் சிலர், தப்பியோடினர்.

செல்போனை பறிகொடுத்தவர்கள் எழுப்பிய கூக்குரலை அடுத்து, அங்கிருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள், அந்த இளைஞர்களை விரட்டிச் சென்று மடக்கினர். இதில், ஒருவன் மட்டும் பிடிபட மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாக 2 பயணிகள் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த திடீர்நகர் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவன், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜன் என்பது தெரியவந்தது. தப்பியோடிய 3 பேரும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments