தங்கள் வாழ்வுக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்றும் பொதுமக்களிடமும் போலீசாரிடமும் தாங்கள் படும் துன்பம் சொல்லி தீராது கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் வேதனை

0 1894

தங்கள் வாழ்வுக்கும் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்றும் பொதுமக்களிடமும் போலீசாரிடமும் தாங்கள் படும் துன்பம் சொல்லி தீராது எனவும் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை அருகே உள்ள மீஞ்சூரை அடுத்த வீச்சூரில் எஸ்.ஆர்.எஸ். கண்ட்டெய்னர் முனையத்தில் கண்டெய்னர் ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தேவராஜ் என்ற ஓட்டுநர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற விபத்துகள் கண்ட்டெய்னர் முனையங்களில் அடிக்கடி நடப்பதாகக் கூறும் ஓட்டுநர்கள், முனையங்களில் உரிய பாதுகாப்பு வசதிகளோ, அடிப்படை வசதிகளோ இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments