காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணின் கணவர், விடைகளை அனுப்பிய மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் கைது

0 1781

திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பெண், அவருக்கு உதவிய மருத்துவர் மற்றும் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை அன்று திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மையத்தில் எஸ்.ஐ தேர்வெழுதிய லாவண்யா என்பவர், கேள்வித்தாளை செல்போனில் படம் எடுத்து, உதவி ஆய்வாளராக பணியாற்றும் தனது கணவர் சுமன் மற்றும் அவரது நண்பரான மருத்துவர் பிரவீண் ஆகியோருக்கு அனுப்பி விடையை கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் லாவண்யா, அவரது கணவரான எஸ்.ஐ சுமன், விடைகளை வாட்ஸ் அப்பில் அனுப்பிய மருத்துவர் பிரவீண் மற்றும் தேர்வு மையத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டுகொள்ளாமல் விட்டதாக, மைய கண்காணிப்பாளராக இருந்த அவலூர்பேட்டை உதவி ஆய்வாளரும் சுமனின் நண்பருமான சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments