விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பிய பிரக்யான் ரோவர்... புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ

0 5539

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுக்கு மேற்கொண்டுள்ள விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்துள்ளது.

அதில் நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை லேண்டரில் உள்ள சேஸ்ட் கருவியும், நில அதிர்வுகள் குறித்து இல்ஸாவும் ஆராயும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் படம் பிடித்ததாகவும், ரோவரில் அமைந்துள்ள நேவிகேஷன் கேமரா மூலம், இந்த அற்புதமான புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் நேவிகேஷன் கேமரா, எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன், பிரக்யான் ரோவரை விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில், லேண்டரை ரோவர் எடுத்துள்ள புகைப்படத்தை இஸ்ரோ வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments