இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததால் விமானங்கள் ரத்து

0 1210

இங்கிலாந்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழந்ததால் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாயினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் நேரிட்டதாகவும் ஆனால், அவை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் ஹாம்ப்ஷையரில் உள்ள அந்நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

விடுமுறையைக் கழிக்க பல்வேறு நகரங்களுக்குச் சென்றவர்கள் திரும்பிவர இயலாமல் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தானதாகக் கூறப்படும் நிலையில், பல மணி நேரத்திற்குப் பின் நிலைமை சீரானதாக ஹீத்ரு விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments