பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தொடரும் மின்தடை மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டம்

0 2246

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் தொடரும் மின்தடை மற்றும் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கடந்த 3ம் தேதி தொடங்கிய போராட்டங்கள் பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளன.

பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்து மக்கள் பல்வேறு நகரங்களிலும் டவுண்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் இப்பிரச்சினைக்கு 48 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டுமென இடைக்கால பிரதமர் அன்வர் உல் ஹக் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments