முன் தலையில் முடி தெரியும்படி மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் பள்ளி மாணவிகள் 14 பேரின் முன் தலை முடியை மழித்த ஆசிரியர்

0 2606

இந்தோனேஷியாவில் முறையாக ஹிஜாப் அணியாத பள்ளி மாணவிகள் 14 பேரின் முன் தலை முடியை மழித்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பள்ளி மாணவிகள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனேஷிய அரசு தளர்த்தியிருந்தது.

இந்நிலையில் லமோங்கன் நகரிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில், முன் தலையில் முடி தெரியும்படி, ஸ்கார்ஃப் அணியாமல் ஹிஜாப் அணிந்துவந்த 14 மாணவிகளின் முன் தலை முடியை ஆசிரியர் ஒருவர் மழித்தார்.

பெற்றோரிடம் மன்னிப்பு கோரிய பள்ளி நிர்வாகம், மனித உரிமை ஆர்வலர்கள் அளித்த அழுத்தத்தால் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments