அரசு மருத்துவக்கல்லூரி முழுமையாக செயல்படவில்லை என்பதை கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி

0 2575

அரியலூர் மாவட்ட அட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திடீரென அங்கு நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு சென்று பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.

அப்போது 2 ஆண்டுகளாக உதவி தொகை கேட்டு மனு கொடுத்து அலைவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் கூறிய நிலையில், அவருக்கு உடனடியாக உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார்.

பின்னர் அவர் பேட்டியளித்த போது, 5 மாதங்களுக்கு முன்பு தங்களால் தொடங்கப்பட்ட அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுமையாக செயல்படவில்லை என செய்தியாளர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அருகிலிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின், விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments