சூரியனை ஆராய்வதற்காக வரும் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது ஆதித்யா எல்-1 - இஸ்ரோ அறிவிப்பு

0 1847

சந்திரயன் 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்வதற்காக வரும் 2-ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சூரியன் உள்ள நிலையில், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் விண்கலம் நிலை நிறுத்தப்படும்.

இதற்காக 4 மாதங்கள் பயணம் செய்து நிர்ணயிக்கப்பட்ட இடத்தை விண்கலம் சென்றடையும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

விண்வெளியில் மையம் கொண்ட இந்தியாவின் முதல் ஆய்வகமாக ஆதித்யா எல்-1 செயல்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

எலக்ட்ரோ மேக்னடிக் உதவியுடன் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்வதே ஆதித்யா விண்கலத்தின் முக்கிய நோக்கமாகும்.

பூமியை நோக்கி வரும் சூரிய புயல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments