குன்றத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரைகள், டாக்டர்கள் இல்லை என பெண் ஒருவர் சட்டமன்ற பொது கணக்கு குழுவினரிடம் புகார்

0 1400

சென்னை, குன்றத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பொது கணக்கு குழுவினரிடம் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.

சட்டமன்ற பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஈஸ்வரன், கிருஷ்ணசாமி ஆகியோர் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கணக்கு குழுவினருடன் வந்த மாவட்ட ஆட்சியரிடம் அந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை எனவும், இரவு நேரங்களில் நடக்கும் பிரசவத்தின் போது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சென்னைக்கு அனுப்பி வைப்பதாகவும் 10 மாத்திரை எழுதி கொடுத்தால் சில மாத்திரைகளை வெளியே வாங்கி கொள்ள சொல்வதாகவும் பெண் ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments