மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது

0 1152

மதுரை ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் பெட்டியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் ஆன்மீக சுற்றுலா வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி விசாரணை நடத்தி வந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 பேரும் ரயில் பெட்டியில் விதிகளை மீறி சமைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்த நிறுவன ஊழியர்கள் 2 பேர் தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் இரண்டு சிலிண்டர்கள், 5 அடுப்புகள், நிலக்கரி ஒரு மூட்டை, மண்ணெண்ணெயுடன் கூடிய ஸ்டவ் உள்ளிட்டவைகளை எடுத்து வந்ததுடன், கன்னியாகுமரியில் சட்ட விரோதமாக சிலிண்டர் ஒன்றையும் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

சிலிண்டரின் ரெகுலேட்டரில் கசிவு ஏற்பட்டு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments