ஜெயலலிதாவின் பெயரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இருட்டடிப்பு செய்கிறது - எடப்பாடி பழனிசாமி

0 1714

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இருட்டடிப்பு செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்போது "புரட்சித்தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக "புறநகர் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்யப்படுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் சூட்டிய பெயரை முழுமையாக அறிவிப்பு செய்யவில்லை என்று கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த நிலை தொடர்ந்தால், மெட்ரோ ரயில் நிறுவனம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments