40 அடி உயர சிறைச்சாலை சுற்றுச்சுவரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிய கைதியின் சிசிடிவி காட்சிகள்...!

0 3094

கர்நாடகாவில் சினிமா பாணியில் 40 அடி சுற்றுசுவரில் இருந்து குதித்து கைதி தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தாவனகெரே அருகேயுள்ள கரூரைச் சேர்ந்த வசந்த் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தாவனகெரே சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை வசந்த் சிறைச்சாலை சுற்றுச்சுவர் அருகேயுள்ள தென்னை மரத்தில் ஏறி 40 அடி உயர சுவரிலிருந்து குதித்து தப்பி சென்றார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் ஒற்றைக்காலில் நடந்த படி அங்கு வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments